சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
துபையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (49) என்பவர் மறைத்து எடுத்து வந்த 28.63 லட்சம் மதிப்புள்ள 567.500 கிராம் தங்கம் மற்றும் ரூ.5550 மதிப்புள்ள மூன்று (மது) விஸ்கி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.