தமிழ்நாடு

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி குரூப்-1 தேர்வு: கோவையில் சுமார் 11,887 பேர் பங்கேற்பு

DIN

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள் கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் உள்ள 40 அறைகளில் நடைபெற்று வருகிறது. 

கோவையில் குரூப் 1 தேர்வுக்கு 11 ஆயிரத்து 887 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வை கண்காணிக்க 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வு கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT