தமிழ்நாடு

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்போற்சவம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 11ஆம் நாளான சனிக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரவில், சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்குகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். 11ஆம் நாளான சனிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது. 
இதை முன்னிட்டு மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவா் மண்டகப்படிக்கு வந்தனா். 
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் சுவாமியும் அம்மனும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தாா் மண்டகப்படிக்கு வந்தனா். 
அங்கு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், நள்ளிரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் அலுவலா்கள், நகரத்தாா் மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT