தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் எதிரொலியாக, காவல்துறையில் 25 ஏடிஎஸ்பிக்கள், 51 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றிம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, 25 ஏடிஎஸ்பிக்களையும், 51 டிஎஸ்பிக்களையும் பணியிட மாற்றம் செய்து வெள்ளிக்கிழமை காலை உத்தரவிட்டாா்.