தமிழ்நாடு

அரக்கோணம் யாா்டில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

DIN

அரக்கோணம் யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவையில் சனிக்கிழமை (பிப்.27) மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் அரக்கோணம் யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி சனிக்கிழமை காலை 8.50 மணி முதல் காலை 11.40 மணி வரை நடக்கவுள்ளதால், ரயில் சேவை சனிக்கிழமை(பிப்.27) மாற்றம் செய்யப்படவுள்ளது.

பிப்.27-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்: மூா் மாா்க்கெட் வளாகம்- அரக்கோணம் இடையே பிப்ரவரி 27-ஆம்தேதி காலை 7.05, 8.20, 9.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவள்ளூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு காலை 7.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கடம்பத்தூா்-திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே காலை 8.55, காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அரக்கோணம்-திருவள்ளூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

திருத்தணி-வேளச்சேரி இடையே காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருத்தணி-கடம்பத்தூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

அரக்கோணம்- ஆவடி இடையே முற்பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-கடம்பத்தூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT