தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: தொ.மு.ச. பேரவை

DIN

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தொ.மு.ச. பேரவை பொதுச்செயலர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் திடீரென சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்து நேற்றுமுதல் (26.02.2021) நடத்தை விதிகள் அமுலுக்கு வருவதாக அறிவித்துவிட்டது. இதனை காரணம் காட்டி எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று அரசு கைவிரித்துவிட்டது. 
பின்னர் தொழிலாளர் ஆணையர் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கங்களும், நிர்வாகமும் சகஜநிலைக்கு திரும்ப வேண்டும், வேலைநிறுத்தத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, மற்றுமுள்ள பிரச்னைகளை தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் அமைதி காத்திட அறிவுரை வழங்கியுள்ளார். 
அதேபோல் அனைத்து கட்சி தலைவர்களும் வைத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்கவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்சமயம் இப்போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதென அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் ஒப்புதலோடு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT