சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், தொழுநோய் ஊனத்தடுப்பு சுய பாதுகாப்பு பயிற்சி மற்றும் சிறப்பு தோல் நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பேளூர் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
சேலம் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு மேற்பார்வையாளர் பழனியப்பன், புனித மேரி மருத்துவமனை தொழுநோய் தடுப்புப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆன்டனி ஆகியோர் பயனாளிகளுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி மற்றும் சிகிச்சை அளித்து, பாதணிகள், முதலுதவி மருத்துவ உபகரணங்கள், உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினர்.
இம்முகாமில், மருத்துவர் கார்த்திகா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வபாபு, கோபி, செல்வம் ஆகியோர் பயனாளிகளுக்கான தொழுநோய் விழிப்புணர்வு வழங்கினர். வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சண்முகம் நன்றி கூறினார்.