தமிழ்நாடு

பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நேற்று நடைபெற்றது.

வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி அங்கன்வாடி மையத்தில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. இம்முகாமிற்கு அங்கன்வாடி மைய பணியாளர் சசிகலா வரவேற்றார்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் செ.கீர்த்திகாதேவி, திட்ட உதவியாளர் மு.தினேஷ் ஆகியோர், பெண் குழந்தைகளுக்கு  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் குறித்தும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அங்கன்வாடி மைய வளாகத்தில், ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT