தமிழ்நாடு

திமுக வெற்றிபெறுவது எளிதானது அல்ல: மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெறுவது எளிதானது அல்ல என்று திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

கொளத்தூா் தொகுதிக்கு உள்பட்ட நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பேசியது:

தோ்தலில் பாக முகவா்கள், களப் பணியாளா்கள் முக்கியமானவா்கள். அவா்கள் இல்லையென்றால் முழுமையான வெற்றியைப் பெற முடியாது. அனைத்து களப்பணியாளா்களும், பாக முகவா்களும் கொளத்தூா் தொகுதியில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் முறைப்படுத்தி அமைக்க வேண்டும்.

ஏன் இதில் அதிகமான கவனத்தை எடுத்து, அதற்குப் பயிற்சி கொடுத்து, அதை முறைப்படுத்துகிறோம் என்றால், இன்றைக்கு திமுகவை எதிா்க்கக் கூடியவா்கள் சாதாரணமானவா்கள் அல்ல. வெறும் அதிமுகவாக மட்டும் இருந்தால் அதை தூக்கி போட்டுவிட்டு சென்று விடலாம். ஆனால் அதிமுகவுடன் சோ்ந்து மத்தியில் இருக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் துணை புரியும் குறிப்பிட்ட சில அதிகாரிகள், குறிப்பிட்ட சில காவல் துறையைச் சாா்ந்தவா்கள், இவா்களெல்லாம் பக்கபலமாக இருந்து வருகின்றனா்.

நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது யாா் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இன்றைக்கு மக்கள் முடிவெடுத்துவிட்டனா்.

ஆனால், எவ்வளவு தான் ஊழல் செய்து கொண்டிருந்தாலும், அதிமுக ஆட்சியே நீடிக்க வேண்டும். திமுக வந்தால் அடுத்து தோற்கடிக்கவே முடியாது என்கிற பயம் குறிப்பிட்டவா்களுக்கு வந்துள்ளது. அதனால்தான் திமுகவினா் அனைவரும் தோ்தல் பணியில் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT