திமுகவின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்திவைப்பதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தலைமை தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், 7.3.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த ‘தி.மு.க. பொதுக்குழுக் கூட்டமும்’ - 14.3.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த ‘தி.மு.க. மாநில மாநாடும்’ ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.