தமிழ்நாடு

தா. பாண்டியன் மறைவு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான தோழர் தா. பாண்டியன் தமது 89 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இளமைப் பருவம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து இலக்கிய ஆர்வத்தின் மூலம் தோழர் ஜீவானந்தம் அவர்களின் ஆதரவின் காரணமாக தீவிரமாக இலக்கியப் பணியாற்றியவர். அற்புதமான சொற்பொழிவாளர். ஆங்கில மேடைப் பேச்சுகளை மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்ப்பவர்.

மிகச் சிறந்த எழுத்தாளரான இவர், ஜனசக்தி வார இதழின் ஆசிரியராக இருந்தவர். மேடை பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தமக்கென தனி முத்திரை பதித்தவர். இந்திய தேசிய காங்கிரசோடு, குறிப்பாக மறைந்த தலைவர் ராஜிவ்காந்தி அவர்களோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.

தோழர் தா. பாண்டியனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT