தமிழ்நாடு

மே 2-இல் தேர்தல் முடிவுகள் வெளியீடு: தலைமைத் தேர்தல் ஆணையர்

DIN

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் மே 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார். 

புது தில்லியில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டார். 

அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை, கேரளத்துக்கு ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் மே-2ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT