தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நாளை (பிப்.27) சென்னை வருகிறார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை (பிப்.27) இரவு 10 மணிக்கு சென்னை வருகிறார். விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.