சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அவரது மனைவி பிரேமலதா, விருதாச்சலத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக, அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (பிப்.25) முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை முதல் தேமுதிகவில் போட்டியிட விரும்புபவகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அவரது மனைவியும் பொருளாளருமான பிரேமலதா விருதாச்சலத்தில் போட்டிவும், அவரது மகன் விஜய பிரபாகரன் அம்பத்தூரில் போட்டியிடவும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.