சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அடுத்த சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்த நிலையிலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.