சென்னை: ஏழைகளின் வயிறு எரியும் நெருப்பு ஆபத்தானது என்று கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.