கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலையில் திடீரென்று குடிநீர் குழாய் வெடித்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலை அரசமரம் அருகில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மாலையில் பாலப்பணிகள் நடைபெறும் இடத்தில் குறுக்கே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்லும் பிரதான குழாய் திடீரென்று வெடித்தது.
இதனால் தண்ணீர் வெடிகுண்டு வெடிப்பது போல் பீய்ச்சி அடித்தது. இதனால் சாலையில் சென்ற மக்கள் அலறி ஓடினர். பின்னர் தண்ணீர் சுமார் 3 நிமிடம் வரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குறையத்தொடங்கியது.
பிரதானச் சாலையில் பாலம் வேலை நடைபெறுகிற இடம், அதிக போக்குவரத்து உள்ள இடம், இந்த இடத்தில் குழாய் வெடிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தை காட்டியது.