தமிழ்நாடு

கம்பம் பிரதானச் சாலையில் குடிநீர் குழாய் வெடிப்பு: மக்கள் அலறியடித்து ஓட்டம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலையில் திடீரென்று குடிநீர் குழாய் வெடித்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பிரதானச் சாலை அரசமரம் அருகில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் பாலப்பணிகள் நடைபெறும் இடத்தில் குறுக்கே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்லும் பிரதான குழாய் திடீரென்று வெடித்தது.

இதனால் தண்ணீர் வெடிகுண்டு வெடிப்பது போல் பீய்ச்சி அடித்தது. இதனால் சாலையில் சென்ற மக்கள் அலறி ஓடினர். பின்னர் தண்ணீர் சுமார் 3 நிமிடம் வரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குறையத்தொடங்கியது. 

பிரதானச் சாலையில் பாலம் வேலை நடைபெறுகிற இடம், அதிக போக்குவரத்து உள்ள இடம், இந்த இடத்தில் குழாய் வெடிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தை காட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT