சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அமமுகவில் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம்.
மார்ச் 10-ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.