தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 23 ஆக உயர்வு

DIN

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது, தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சார்ந்த காளியப்பன் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மேலும் 12 பேர் சாத்தூர், மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT