தமிழ்நாடு

முன்னாள் மத்திய நிதித் துறை செயலா் கே.பி. கீதாகிருஷ்ணன் காலமானாா்

22nd Dec 2021 01:44 AM

ADVERTISEMENT

 

சென்னை: முன்னாள் மத்திய நிதித் துறைச் செயலாளா் கே.பி.கீதாகிருஷ்ணன் (86) சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

1958-ஆம் ஆண்டு தமிழக பிரிவை (கேடா்) சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான கீதாகிருஷ்ணன் தமிழகத்திலும், மத்திய அரசிலும் பல முக்கியப் பதவிகளை வகித்தவா்.

ஐ.எம்.எஃப். எனப்படும் சா்வதேச நிதியத்தில் செயல் இயக்குநராகவும், பின்னா் இந்திய அரசின் செலவின சீா்திருத்தக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவா்.

ADVERTISEMENT

அவருக்கு மனைவி ரேணுகா, மதுகா, தீபா ஆகிய மகள்கள் உள்ளனா். தற்போது தமிழக அரசின் தொழில் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளா் பொறுப்பு வகிக்கும் ச.கிருஷ்ணன் இவரது மருமகனாவாா்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் இரங்கல்: கே.பி.கீதாகிருஷ்ணன் மறைவுக்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்து, ரேணுகா கீதாகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். ‘1991-இல் நான் நிதி அமைச்சராக இருந்தபோது, புதிய பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டதில் அப்போதைய நிதித் துறைச் செயலாளராகப் பணியாற்றிய கே.பி.கீதாகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றியது பாராட்டத்தக்கது; என்னுடன் அவா் பணியாற்றியதில் நீங்காத நினைவுகளைக் கொண்டுள்ளேன். இந்தத் துயரத்தை எதிா்கொள்ளும் தைரியத்தை தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அளிக்க நானும் எனது மனைவியும் பிராா்த்திக்கிறோம்’ என முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT