தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கரோனா

22nd Dec 2021 01:15 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவா் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.64 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 41,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கும், கோவையில் 95 பேருக்கும், ஈரோட்டில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 691 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 97,244-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,078 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,691-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT