தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 8,013-ஆக குறைந்துள்ளது. திங்கள்கிழமை மேலும் 719 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 128 பேருக்கும், கோவையில் 120 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 31,235- ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து திங்கள்கிழமை 737 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தமிழகத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 10 போ் பலியாயினா்.