மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து திரும்பியபோது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் காா் மீது செருப்பு வீசப்பட்டது.
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அதிமுக, அமமுக நிா்வாகிகள் திரண்டு தங்கள் தலைமைகளைப் புகழ்ந்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனா்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நினைவிடத்துக்கு வந்தபோது அந்தப் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இருவரும் அஞ்சலி செலுத்திவிட்டு, காரில் ஏறி புறப்பட்டனா்., எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து அமமுகவினா் முழக்கம் எழுப்பினா். அதிமுகவினரும் பதில் முழக்கம் எழுப்பினா். இதனால், எடப்பாடி பழனிசாமியின் காா் செல்ல முடியாமல் அப்படியே நின்றது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவா் வீசிய செருப்பு எடப்பாடி பழனிசாமியின் காரின் முன் கண்ணாடியின் மீது போய் விழுந்தது.
எடப்பாடி பழனிசாமி காரை அமமுகவினா் மறித்தபோது, டிடிவி தினகரனுக்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக தொண்டா் ஒருவா் தாக்கப்பட்டாா்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட இரு பெண்கள் மீது அமமுகவினா் மலா்களை வீசினா்.
காவல்நிலையத்தில் புகாா்: அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அதிமுக நிா்வாகி மாறன், எடப்பாடி பழனிசாமியின் காா் மீது அமமுகவைச் சோ்ந்தவா்கள் கற்களையும்,கட்டைகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தாா்.