தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
சேலம் பெரியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை பங்கேற்க இருந்த நிலையில் அவா், திடீா் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளாா். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை அடுத்து, அவா் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகாலாந்தில், பிரிவினைவாதிகள் என்று நினைத்து பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 அப்பாவித் தொழிலாளா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருந்தவா் என்பதால், அங்குள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவா் தில்லி அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.