தமிழ்நாடு

பகல்பத்து 2ம் நாள் விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை, சவுரி கொண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் பகல்பத்து விழா சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, கையில் தங்கக் கிளியுடன் கூடிய ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜகீா்த்தி, பருத்திக்காய் காப்பு உள்ளிட்ட திருவாபரணங்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு 8.15-க்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா். 

பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில், சவுரி கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா். 

பகல்பத்தின் கடைசி நாளான வரும் 13 ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT