தமிழ்நாடு

ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஜெயந்தி விழா

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீர்த்தனம், அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணிக்கு சிறப்பு ஹோமம், நித்ய பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முகநூல் நாம சங்கீர்த்தனம், நித்ய பூஜை, தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரை பக்தர்கள் வணங்கினர்.
இன்றைய நிகழ்ச்சிகள்: ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை (டிச.1) அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீர்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மஹாபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தி, இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள் மதர் மாதேவகி, மதர் விஜயலட்சுமி, மதர் ராஜேஸ்வரி, மருத்துவர் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT