திமுக தனது வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாமல், அவை நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணையைத் தெரிவிக்கவில்லையெனில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 11 தீர்மானங்கள், சிறப்புத் தீர்மானம், இரங்கல் தீரமானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
சிறப்புத் தீர்மானத்தில், ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர பொன்விழா கொண்டாட்டம், திமுகவுக்கு எதிராக போராட்டம், திமுக அரசுக்குக் கண்டனம் என 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள் முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..