தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்

7th Aug 2021 06:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நில நிர்வாக இணை ஆணையராக செந்தாமரை, பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக அருணா, குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் இயக்குநராக ஸ்ரவண்குமார் ஜதாவத், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணைச் செயலாளராக ஆனி மேரி ஸ்வர்ணா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை இணை செயலாளராக ஜான் லூயிஸ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சி.இ.ஒ.வாக லட்சுமி ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Tags : IAS Officers
ADVERTISEMENT
ADVERTISEMENT