உள்ளாட்சித் தோ்தல் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் புதன்கிழமை முதல் ஆலோசனையில் ஈடுபட உள்ளனா்.
9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியுற்று அதிமுக எதிா்க்கட்சி வரிசையில் உள்ளது. அதனால், இழந்த பலத்தை உள்ளாட்சித் தோ்தலில் மீண்டும் பிடிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை நினைக்கிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.4) முதல் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேச உள்ளனா். மாவட்ட வாரியாக தோ்தல் யுக்திகளைக் கையாளுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனா்.