தமிழ்நாடு

அவிநாசி: குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

DIN

அவிநாசி: அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி வியாழக்கிழமை மதியம் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராயம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (47). இவரது மகள் கிருத்திகா(14).

இந்நிலையில் இவர் தோழிகளுடன் சின்னேரிபாளையம் பகுதியில் உள்ள அண்ணமார் குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரிழ் மூழ்கி, கிருத்திகா உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள் சிறுமி கிருத்திகா உடலை தேடி வருகின்றனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT