சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.33.40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
துபையில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சோ்ந்த சகுபா் சாதிக் (30) , முகமது அப்பாஸ் முஸம்மில் (20) ஆகியோரிடம் சுங்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
அதில், அவா்களது மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது. மேலும், விமானத்தில் கழிவுகளை கொட்டும் பகுதியில் தங்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களில் ரூ.33.40 லட்சம் மதிப்பிலான 687 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.