சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கடந்த 12 நாள்களில் ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 19 வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.