மதுக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், மீண்டும் டோக்கன் முறையில் மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை (ஏப். 20) முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமலாகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், டோக்கன் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக மாலை வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படவுள்ளது.