சென்னை: தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.. உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் (விடியோ)
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. எனவே, இரவு 10 மணி முதல் 4 மணி வரை பேருந்துகளை இயக்க அனுமதியில்லாததால், கோயம்பேட்டில் நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.