தமிழ்நாடு

தேனி: பிரேத பரிசோதனை செய்த உடலை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம்

DIN

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த உடலை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். 

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த உடலை வேறு நபர்களிடம் ஒப்படைத்தால் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கூலித் தொழிலாளியின் உடலைக் கேட்டு அவரது உறவினர்கள் க.விலக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு (70) கூலி வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வீட்டின் அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்க உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி அய்யாவு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் திங்கள்கிழமை மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு உடலான பெரியகுளத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் உடலுக்குப் பதிலாக அய்யாவுவின் சடலத்தை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது.

மேலும் ராமுவின் உறவினர்கள் அய்யாவுவின் உடலைப் பெற்றுக்கொண்டு சென்று ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அய்யாவுவின் உடலை தங்களுக்குப் பெற்றுத் தரக்கோரி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

SCROLL FOR NEXT