சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற உள்ள அறுவை கிசிச்சைக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.. உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் (விடியோ)
ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.