தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையின்படி,
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு (16.04.21, 17.04.21) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
17.04.21 முதல் 19.04.21 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோவில்பட்டி 9, மஞ்சளாறு, நத்தம் தலா 7, மதுரை விமான நிலையம் 6, சாத்தூர், காரியாபட்டி, திருமங்கலம், பெருந்துறை தலா 5, எட்டயபுரம், பெரம்பலூர், டிவருதுநகர் தலா 4, மருங்காபுரி, மானாமதுரை, பெரியாறு, பெனுகொண்டாபுரம் தலா 3, பெரியாறு, பெனுகொண்டாபுரம் தவப 3 செ.மீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
16.04.21; தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.