தமிழ்நாடு

சீர்காழியில் காலை முதலே பலத்த மழை

DIN

சீர்காழி:  சீர்காழியில் இன்று  (ஏப்.15) காலை 5 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி , மின்னலுடன் பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது.

மழை பெய்ய தொடங்கியது முதல் மின்சாரம் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த மழையால்  கோடை உஷ்ணத்தால்  அவதியடைந்து வந்த  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் உளுந்து, பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழையால் கவலை அடைந்துள்ளனர்.

சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில், தற்போது மழையில் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சீர்காழி கொள்ளிடம் வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT