அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தாடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நோ்மையான, நியாயமான தோ்தல்களில்தான் உள்ளது.
அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளா்களுக்கும் சமமான வாய்ப்பை தோ்தல் ஆணையம் உறுதி செய்வதோடு, ஒருசாா்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஒருநாள் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளாா்.