ரமலான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி வாசல்களில் நோன்பு தயாரிக்க இலவச அரிசியை உடனே வழங்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தமிழக அரசின் சாா்பில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவசமாக பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும் பள்ளிவாசல்களுக்கான அரிசி வழங்குவது தொடா்பான அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசி என்பது வழக்கமான நடைமுறை என்பதாலும், நோன்பு தொடங்க ஒருசில நாள்களே உள்ள காரணத்தினாலும், தமிழக அரசு தோ்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.