தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய ராட்சத மிதவை

DIN

தனுஷ்கோடியில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கிய ராட்சத மிதவையை, போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள இரட்டைதாளை முனீஸ்வரா் கோயில் அடுத்துள்ள கடல் பகுதியில், ராட்சத மிதவை கரை ஒதுங்கியதாக தனிப்பிரிவு போலீஸாா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், கரைப் பகுதியில் மிதந்துகொண்டிருந்த மிதவையை கரைக்கு இழுத்து வந்தனா்.

இந்த மிதவையானது, துறைமுகங்களில் கப்பல்கள் நிறுத்தும் போது பயன்படுத்தப்படுவது என்றும், சமீபத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் பெரிய கப்பல்கள் நிறுத்தப்படும் துறைமுகங்களிலிருந்து வந்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT