சென்னை: உ.பி.யில் இத்தகைய கொடூரங்கள் தொடர்கதை ஆவதை தடுக்க வேண்டும் என்று கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக ஆளும் உ.பி-யில் 19 வயதான பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்முறையால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இந்தியாவையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் தொடர்புடைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. இதுபோன்ற கொடூரங்கள் உ.பி.யில் தொடர்கதை ஆவதையும் தடுக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.