தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் ரூ.68 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை 

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.68 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருப்பூர், திருப்பத்தூர், தேவத்தூர், கீரனூர், அணைப்புதூர், மங்கலப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து 155 விவசாயிகள் தங்களுடைய 1,391 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 67,456 கிலோ. காங்கயம், முத்தூர், மூலனூர், தாராபுரம், அவல்பூந்துறை, நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 15 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

விலை கிலோ ரூ.73.00 முதல் ரூ.118.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.116.35. விற்பனை கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.68 லட்சத்து 3 ஆயிரத்து 34 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT