கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள 12 மைல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மீண்டும் தடை நீடித்து வனத்துறை அறிவித்துள்ளது.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்குவது வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் அக்டோபர் 1−ம் தேதி முதல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் தமிழக அரசு அக்டோபர் 31 வரை ஊரடங்கினை நீட்டிப்பு செய்திருப்பதால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மீண்டும் வனத்துறை தடை விதித்துள்ளது.