சென்னை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பல்வேறு திட்டப் பணிகளை பாராட்டி அதிமுக செயற்குழுவில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முதல்வர் பழனிசாமியை பாராட்டி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரோனா காலத்தில் பொருளாதார நிலையைச் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருவது, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்தது, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்தது, பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்புக்கு உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வழி செய்தது, நதிகள் இணைப்பு ஆகிய பணிகளுக்காக முதல்வர் பழனிசாமியை பாராட்டி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசை வலியுறுத்துவது, தேர்தல் பணியாற்றுவது என மற்ற அம்சங்கள் தொடர்பாக 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.