திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து பகுதியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் கிட்டான் என்ற நவநீதகிருஷ்ணன்(29). இவா், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனின் பரிந்துரையின்பேரில், அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவிட்டாா். அதன்படி, நவநீதகிருஷ்ணனே, தாழையூத்து காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சோபா ஜென்சி திங்கள்கிழமை கைது செய்தாா்.