தமிழ்நாடு

நெடுஞ்சாலை சிக்னலில் உறங்கிய லாரி ஓட்டுநர்: எழுப்பி அனுப்பிய உதவி ஆய்வாளர்

DIN

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சிக்னலில் செவ்வாய்க்கிழமை உறங்கிய லாரி ஓட்டுநரைப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் எழுப்பி அனுப்பி வைத்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவு செல்லும் இந்நிலையில் இன்று கனரக வாகனம் ஓட்டி வந்த  ஓட்டுநர் ஒருவர் திடீரென கிரீன் சிக்னல் இருந்தும் போகாமல் உறங்கிவிட்டார். 

அவரை அங்கு பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருபாகரன் விரைந்து சென்று தட்டி எழுப்பி அறிவுரை வழங்கி அனுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT