கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வாங்கப் பட்டதாரிகள் குவிந்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப் 30 கடைசி நாளாகும். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடம் 19 , சமையல் உதவியாளர் பணியிடம் 32 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன.
நேரடி நியமன முறையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. இதனை வாங்குவதற்காகப் பட்டதாரிகள் பெரும் திரளாகக் குவிந்து விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர்.