தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் சத்துணவுப் பணியாளர் விண்ணப்பம் வாங்கக் குவிந்த பட்டதாரிகள்

DIN

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வாங்கப் பட்டதாரிகள் குவிந்தனர். 

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப் 30 கடைசி நாளாகும். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடம் 19 , சமையல் உதவியாளர் பணியிடம் 32 என மொத்தம் 51  இடங்கள் உள்ளன. 

நேரடி நியமன முறையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. இதனை வாங்குவதற்காகப் பட்டதாரிகள் பெரும் திரளாகக் குவிந்து விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT