தமிழ்நாடு

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை: வைத்திலிங்கம்

DIN


சென்னை: அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடந்த  ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என இருவருக்கும் நான் ஆதரவாளனாகவே இருக்கிறேன் என்று கூறினார். 

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து கடும் விவாதம் எழுந்ததாக தகவல்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT