தமிழ்நாடு

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று

DIN

சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி. ஜெயராமனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

அதிமுக செயற்குழுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதில் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்கவிருப்பதால் அவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமனுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் குணமடைந்து வீடு திரும்புவாா் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ‘கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் பூரண நலம் பெற்று பொதுப்பணிகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT